எதுவாயினும் கடக்க
பழகு எல்லாம் சிறிது
காலம் தான்

பாராட்டுகளுக்காக
செய்யும் முயற்சி
வெற்றியைக் கவர முடியாது

துடைக்க யாரும்
இல்லா தருணங்களில்
எல்லோர் முன்பு
வரும் கண்ணீர் கூட
துரோகி தான்

சிறிய முயற்சியானாலும்
தொடர்ந்து செய்து
கொண்டே இரு சிறு
சிறு முயற்சிகள்
தான் மிக பெரிய
வெற்றியாக மாறும்

உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று...!

சில பிரச்சனைகளுக்கு
தற்காலிக தீர்வு தூக்கம்
பல பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு மௌனம்

தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்

மழை மட்டும் தான் இல்லை
சில நினைவுகளும் தூறல் விடும்

விழுந்தாலும்
எழும் திறமையை
வளர்த்துக் கொள்
உலகம் உன்னை மதிக்கும்

வாழ்க்கையும் ஓடுகிறது
நாமும் ஓடுறோம்
கூடவே
கஷ்டமும் கவலையும்
சேர்ந்து ஓடி வருது