சில உறவுகள் வாடகை
வீடு போன்றது எவ்வளவு தான்
நாம் அன்பு செலுத்தினாலும்
அவர்களுக்கு தற்காலிகமே
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்
நிம்மதியை தேடாதே
மனதை அமைதியாக வைத்துக் கொள்
அது தானாக வரும்
பழகியதற்கான
பலனை அடைந்தவுடன்
சிலர் விலகுவதற்கான
காரணங்களை
தேடுகின்றனர்
கடைசி வரை நம்பிக்கை
இழக்காதே ஏனெனில்
கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி
எழுதப்பட்டிருக்கலாம்
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்
நாளை என்ன கொடுக்கும்
என்று பயப்படாமல்
இன்று என்ன தருகிறது
என்று ரசிக்க கற்றுக்கொள்
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும்
போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்
துன்பமும் ஏழ்மையும்
போதிப்பது போல்
வேறொன்றும்
போதிக்க முடியாது
மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும்
எனக்கு மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி
📖 பக்கம் 164 / 606
📋 Copied