நீ இழந்ததை நினைத்து
வருந்தினால் இருப்பதையும்
இழந்து விடுவாய் நீ
இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் இழந்ததையும்
அடைந்து விடுவாய்
தொடர்ந்த பயணம் இல்லாமல்
ஓர் இலக்கு கூட
வெற்றியாக மாறாது
முயற்சி எப்போதும் பேசாது
ஆனால் முடிவில்
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்
புரிதல் என்பது
அன்பானவர்களின்
புன்னகையையும் மனதையும்
அறிவதிலும் தான் உள்ளது
உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்
தோல்வியை
ஏற்றுக்கொள்ளாதவன் தான்
வெற்றிக்கு அருகில் இருக்கிறான்
யாருக்காகவோ
காத்திருப்பதை விட
நமக்காக
காத்திருப்பவரின்
அன்பை
ஏற்றுக் கொள்ளலாம்
பரிகாசங்களை விட
பரிதாபமே நம்மை
பலவீனப்படுத்தும்
பயத்தால் துவங்காமல்
நிற்கும் காலம்
முயற்சியால் மாற்றப்படும்
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும்
வேதனை இருக்கும்
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி இருக்கும்
📖 பக்கம் 16 / 606
📋 Copied