ஒரு தவறு நடந்தால்
பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள்
மற்றவர்களில் இருந்து
தேடாதீர்கள்

புன்னகையால் தொடங்கும் நாள்
எதையும் தாண்டும் வலிமை தரும்

காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல

எதிர்பாரா நேரத்தில்
வந்தவை
எதிர்பார்க்கும் போது
வருவதில்லை

எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்

உளறல்கள் கூட
கவிதையாகிறது
சில நேரங்களில்

மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு

வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை

வருங்காலத்தைப் பற்றி
கவலைப் படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்ல
விதமாக செயல்பட்டால்
வருங்காலம் தன்னால் மலரும்

நடப்பதைப் பார்த்து
நின்றுவிடாதே
நீ நடந்ததைப் பார்த்து
நம்பிக்கை கொள்