போராடி கரை சேர
எத்தனிக்கையில்
புயலில் சிக்குண்டு
சிதைந்தே போனேன்
பொறாமை வளர்ச்சியை
தள்ளி வைக்கும்
மௌனத் தடையாகும்
வாழ்வின் உண்மை
நாம் தேர்ந்தெடுக்கும்
மனநிலையில் தான்
மாறாதது சிலரின்
நினைவுகள் மட்டுமே
வாழ்க்கை கூட மாறிடும்
காலம் கற்றுக் கொடுக்கும் பாடமே
வாழ்வின் சிறந்த ஆசிரியர்
நெருக்கடிகள் நம்மை வீழ்த்த
நம் முன் நிற்கும் போது
அந்தக் கணமே
மனம் உடைந்தாலும்
மனத்தின் ஆழத்தில் இருக்கும்
உற்சாகம் நம்மை மீண்டும்
மேலே கொண்டு வரும்
ஆகையால் வாழ்க்கையில்
"மன அழுத்தத்தை" தவிர்க்கவும்
சில நினைவுகள் வலிக்காது
ஆனால் மறக்கவும் முடியாது
உலகம் அதிசயமாகவே
இருந்தாலும் மனம்
விரும்பினால் தான்
ரசிக்க முடியும்
விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை
மாற்றி யோசனை
செய்யாமல் மாற்றங்கள்
வருவதில்லை
📖 பக்கம் 142 / 606
📋 Copied