உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

நம் வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு தடைகளுக்கு
பின்பும் இறைவன்
நமக்கு ஏதோவொரு
பாடத்தை கற்பிக்கிறான்

சிறிய நிகழ்வுகளை
புரிய வைக்க
பெரிய அனுபவம் தேவைப்படும்

வாழ்க்கை என்பது
தடைகளை மீறி
பயணிக்கும் பயணமாக
இருக்க வேண்டும்
திசை தெரியாமல் நிற்கும்
பயமாக அல்ல

ரொம்ப யோசிக்கவும் கூடாது
ரொம்ப நேசிக்கவும் கூடாது
இரண்டுமே ஒரு நாள்
பைத்தியமாக்கிவிடும்

முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு

மாற்றி யோசனை செய்யாமல்
மாற்றங்கள் வருவதில்லை

அடுத்தவன் என்ன நினைப்பான்னு
வாழ ஆரம்பிச்சா அப்பவே உன்
நிம்மதி உன்ன விட்டு போயிடும்

தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்
(கவனம்)

பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம்