அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர

வாழ்க்கை
எப்படி போகின்றது
என்று என்னிடம்
கேட்க்கும் கேள்விக்கு
என் பெருமூச்சு தான்
சரியான பதிலாய்
அமையும்

தனிமையான
அமைதி தான்
நீ யார்
என்று உனக்கு
அறிமுகம் செய்யும்

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இங்கே பேசுவதற்கு நிறைய
வார்த்தைகள் உண்டு
ஆனால் கேட்பதற்கு
காதுகள் இல்லை

நம்பிக்கையை தேடி செல்வதை விட
அது உன்னுள் இருப்பதை
உணர்ந்து எழுந்திரு

உள்ளம் அழுகின்ற போது
வெளியில் இருக்கும்
சிரிப்புகளும் பொய்தான்

சோர்வு என்பதே
நமது வாழ்வில் கிடையாது
புத்துணர்ச்சியோடு
நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
எனது வெற்றிக்கான ஏணிப்படிகளே

தடும்மாறும் போது
தாங்கிப்பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான நண்பன்

வாழவும் சொல்லும்
சாகவும் சொல்லும் காதல்