கடினம் தான் என்றாலும்
முயற்சிக்காதது தான் தோல்வி

உன் கனவுகள்
வாழ்வின் புதிய பாதையை
உருவாக்கும் வரை ஒளியாதே

ஒருவரின்
தேவை அறிந்து
அவர் கேட்காமலே
உதவி செய்வாயின்
நீங்களும் கடவுளே

உண்மையான மகிழ்ச்சி
என்பது ஒருவரின் ஆற்றல்
மற்றும் திறமைகளை
முழுமையாகப்
பயன்படுத்தும் வாய்ப்பே

ஏதோ ஒரு நம்பிக்கை
வாழ்க்கையை முன்னோக்கி
நகர்த்தி செல்கிறது...
சிலருக்கு இறை நம்பிக்கையாய்
சிலருக்கு தன்னம்பிக்கையாய்

தனித்து இருப்பவர்கள்
எப்போதும்
தனியாக இருப்பதில்லை
பிடித்த ஒருவரின்
நினைவுகளோடு
தான் இருப்பார்கள்

சில நேரங்களில்
சொற்கள் இல்லாத மௌனம்
மிகவும் காயப்படுத்தும்

புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்

சேகரித்துக் கொள்ளுங்கள்
நினைவுகளை மட்டுமல்ல
நல்லுறவுகளையும்

நிதானத்தை கடைபிடி
அதுவே வெற்றியின் முதற் படி