எவ்வளவு பெரிய
பிரச்சனைக்கும் கையளவு
மனதிடம் தான் தீர்வுண்டு

வாழ்நாட்கள்
அதிகம் வேண்டாம்
வாழ்ந்த நாட்கள்
அதிகமிருந்தால் போதும்

நம் மனதின் வலியை
சொல்ல முடியாத
காரணத்தால் தான்
சில உணர்வுகள்
கண்ணீராக வெளிவருகிறது

இரு மேகங்கள் ஒன்றோடு
ஒன்று இணையும் பொழுது
மின்னல் மோதிரம்
மாற்றிக் கொள்கிறது

வாழ்க்கை என்பது ஒரு இசை
ஒலி மட்டும் அல்ல
அமைதியும் அதில்
பங்கு பெற வேண்டும்

நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை
நமக்கே வெளிச்சம்
போட்டு காட்டும்
சிறந்த கருவி நட்பு

சில நேரங்களில்
அமைதி தான்
மிகப்பெரிய அலறல்

தோல்வியை
எதிர்கொள்ளத் துணிவானவர்களுக்கு
மட்டுமே வெற்றி சொந்தமாகும்

தனக்கு பிடிக்காதவரையும்
தன்னை பிடிக்காதவரையும்
கண்டும் காணாமல்
கடக்கும் பாதங்களே
மகிழ்ச்சிக்கு ஏங்காமல்
நிம்மதியில் நிறையும்

நம்முடைய வாழ்க்கை
எப்போதும் சூரியன் போல
இருக்க வேண்டும்
காலத்திற்கேற்ப இருள் வந்தாலும்
மறுபடியும் ஒளிர வேண்டும்