வாழ்க்கை என்பது ஒரு இசை
ஒலி மட்டும் அல்ல
அமைதியும் அதில்
பங்கு பெற வேண்டும்

ஒரே ஒரு நிமிடம் கூட
விடாமல் செய்த முயற்சி
பல ஆண்டுகளுக்கு
நம்பிக்கை தரும்

ஒவ்வொரு தோல்வியும்
அடுத்த வெற்றிக்கான படிக்கல்லே

சந்தோஷம் வாங்கி தர முடியாது
அது மனதின் மனோபாவம்

இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை

கடவுளிடம் ஏதாவது வரம்
வேண்டும் என்று கேட்டுக்
கொண்டே இருக்கிறோம்
ஆனால் வாழ்க்கை என்பதே
மிகப்பெரிய வரம் தான்

மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்

உன் கனவுகளை மற்றவர்கள்
புரிந்துகொள்வார்கள் என்பதற்காக
காத்திருக்க வேண்டாம்
அதை நீயே உருவாக்கு

கண்ணீர் வழியும் நேரம்
உள்ளத்தின் வலி சொற்களால்
சொல்ல முடியாத தருணம்

முடியாது என்பதை
கடந்து சென்றவனே
முடியுமென்று நிரூபிப்பான்