முயற்சிக்காக விலை கேட்டால் உழைப்பை கொடு அதன் பின் வெற்றி தானாக வந்துவிடும்
துரோகத்தைப் பற்றிய சோகமான விஷயம் என்னவென்றால் அது உங்கள் எதிரிகளிடமிருந்து ஒரு போதும் வராது
கடல் எப்போதும் அமைதியாக இருக்காது அதைப் போல வாழ்க்கையும் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்காது
சில வினாக்களுக்கு பதில் நாம் மட்டுமே
விளையாட தெரிந்த குழந்தையாக இருந்தாலும் வாழ்க்கை ஆட்டம் ரொம்ப கஷ்டம் தான்
வழியெங்கும் நிறைய காயங்கள் கடந்தாக வேண்டும் வேறு வழியேதும் இல்லை அந்நேரத்து மனநிலை கோபம் எரிச்சலென ஏராளம் வழியில் முட்கள் உண்டு தான் பாதம் கிழிக்க வலி தான் இதயம் பிளக்கும் ரணம் தான் ஆனால் வேறுவழியில்லை
இரக்கமும் உறக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும் உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர் இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர்
முடியாது என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு பதிலாக முடியும் என்று உன் செயலால் நிரூபி
மாற்றம் என்கிற வார்த்தையை தவிர அனைத்தும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது மனிதனின் மனம் உட்பட
மனிதன் என்பவன் இயற்கை அனுமதித்த பரிணாம வளர்ச்சியே என்பதை மறந்துவிட்டோம்