வாழ்க்கையின் வழிகள்
குழப்பமாக இருக்கலாம்
நடக்கும் பொழுது தான் புரியும்
எனக்குள் எனக்கென
ஒரு உலகம்
கட்டிடங்களாலோ
கருங்கற்களாலோ
இல்லை கற்பனைகளாலும்
என் கருத்துக்களாலும்
ஒரே பாதையில் நடக்கும்போது
பாதை சீராகும்
வாழ்க்கையில் சவால்கள்
சீரான மனதை தரும்
சில உறவுகள்
நம்முடன் இருப்பதை விட
விலகிச் செல்வதே நல்லது
ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை
சின்ன சின்ன மகிழ்ச்சிகளே
வாழ்க்கையின் பெரிய செல்வம்
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்
நேரம் யாருக்காகவும் நின்றதில்லை
அதனால் நாம்
ஓட கற்றுக் கொள்ள வேண்டும்
வார்த்தைகளால் சிதைவது
மனம் மட்டும் அல்ல
அந்த உறவும் தான்
நமக்கும் சேர்த்தே
வேண்டிக்குற அந்த
மனசுதான் கடவுள்
📖 பக்கம் 10 / 606
📋 Copied