சில சோகங்கள் சொல்ல முடியாது
அவை உணரப்பட வேண்டியவை

நீ வளர்ந்தால்
உன் வெற்றியை விட
உன்னை எவ்வாறு வீழ்த்தலாம்
என்பதில்தான் சிலர்
அதிக கவனம் செலுத்துவார்கள்

அழகு என்பது
வயது உள்ள வரை
அன்பு என்பது
உயிர் உள்ளவரை

தடைகள்
நம்மைத் தடுப்பதற்கு
அல்ல நாம் தாண்டும்
உயரத்தைக்
கூட்டுவதற்கே

பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது

தவறுசெய்ய ஆயிரம்
வழிகள் இருந்தாலும்
அறத்துடன் வாழும்
வாழ்க்கையே அழகான
வாழ்க்கை

முடியாது என முடங்கி
விட்டால் வேதனை
முடியும் என எழுந்து
விட்டால் சாதனை

நாளை என்ன தரும்
தெரியாத வாழ்க்கை
இன்று நிம்மதியாக இருப்பதே
பெரிய கலை

யோசித்துப்பார்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
வாழ்க்கை வரமெனப் புரியும்

எங்கேயும்
நம்மை விட்டுக் கொடுக்காத
உறவை தான் நாம் தேடுகிறோம்
ஆனால் அமைவதென்னவோ
நம்மை உதறிவிட்டு
செல்லும் உறவுகளே