தேடலில் தொடங்கி
எதையோ
தேடித் தேடியே
முடிகின்றது வாழ்க்கை

வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்

இவ்வுலகில் அனைவரும்
உன்னை திரும்பி
பார்க்க வேண்டும்
என்றால் நீ யாரையும்
திரும்பி பார்க்காதே

பிடித்து விட்டால்
மறக்க தெரியாமல்
குழந்தை போல
அடம்பிடித்து நிற்பது
தான் மனதின் குணம்

உழைப்பின் வேரில் தான்
கனவுகளின் பழம் பிறக்கும்

ஒருவரையொருவர்
சரியாய் புரிந்திருந்தால்
எந்த உறவும் அழகே

சேரகம் எனும் பறவைகள்
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க
இயலரது ஆனால் உங்கள்
தலையில் கூடுகட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்

உதடு சிரிப்பது
ஊருக்கு தெரியும்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்

சோகத்தைப் பகிர்ந்தால் குறையும்
அதை மறைத்தால் அதிகரிக்கும்

உலகம் சிரிக்கும்போது மட்டும் இல்லை
நீ அழும்போதும் உன்னை நினைவில்
வைத்திருப்பவர்களே உண்மையானவர்கள்