உறங்க முடியாத கனவுகளில்
தூங்க முடியாத நினைவுகள்
விழித்துக் கொண்டேயிருக்கின்றன

நம் உலகத்தில்
உன்னென்
நிழலை தவிர
வேறதெற்கும்
இடமில்லை

உன் பிரிவு
என் இதயத்தை
நெடுங்காலமாய்
மரத்துபோகச்
செய்கிறது

உன் அதிகாரமும்
பிடிக்கும்
அது அன்பு
கலந்த
அணைப்பென்றால்

உயிர் பிரியும் வலியை
விட உயிராய் நேசித்த
உறவுகள் பிரியும்
வலி கொடுமையானது

உன் புன்னகையின்
ஒவ்வொரு கோணமும்
என் மனதை சிக்க வைக்கும்
காதல் வாசம்

கண்களிலிருந்த வெளிச்சம்
காதலின் அமைதியான
குரலாக ஒலிக்கிறது

மலர்களின்
மணம் போல்
உன் மனம் எனக்கு
இனிமையாக விளங்குகிறது

நினைவோ நிஜமோ காதல்
என்றும் நீங்காத வலிய
மட்டுமே கொடுக்கும்

நெஞ்சை சுரண்டும்
அந்தக் குரல்
சுவாசத்தை பறிக்கிற
காதலின் அறிகுறி