மௌனத்தில் பேசத் தெரிந்த
ஒரே மனிதா என் காதலின்
மொழிபெயர்ப்பாய் இருந்தாய்
மௌனத்தில் பேசத் தெரிந்த
ஒரே மனிதா என் காதலின்
மொழிபெயர்ப்பாய் இருந்தாய்
மௌனம் கூட
காதலை உரைத்துவைக்கும்
நெஞ்சம் புரிந்தால்
விரல்கள் சுரண்டிய இடத்தில்
காதல் கவிதை பிறக்கிறது
திகட்டாத தேனீராய்
எப்போது நினைத்தாலும்
சுவைக்க தூண்டுகிறது
உன் தித்திப்பான
நினைவு
காதல் பிடிக்குள் சிக்கி
காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப் போகட்டும்
காதலர் தின வாழ்த்துக்கள் அன்பே
அடை மழையில்
நனைவதும் ஆனந்தமே
பொழிவது நீ
முத்தங்கள் என்றால்
காதலால்
வாழ்ந்தவர்களை விட
ஏமாந்தவர்கள்
தான் அதிகம்
உன் அதீத
அன்பில்
ஆழ்ந்து
வாழ்தலும் வரம்
என் அன்பனே
விரல்கள் பிணைந்த தருணத்தில்
ஆன்மாவும் ஒன்றாகி விடுகிறது
இருளையும் ரசிக்க
தோணுது
நீ மௌனமாய்
பேசும் போது