உன் வருகைக்கு
முன்னே உனை
முந்தி கொ(ல்)ள்கிறது
உன் நினைவு
என் ஆவலை
தூண்டியே
நிசப்த்த வேளையில்
உன் நினைவின்
ஓசையாய் மெட்டியொலி
இரண்டு இதயங்கள்
ஒன்றாய் துடிக்கும்போது
நேரம் கூட
அதன் சப்தத்தில் தொலைந்துவிடும்
நினைவுகளால்
நனைந்த இதயம்
காதலால் எப்போதும்
புது வசந்தம் காண்கிறது
தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்
நீ நகர்ந்த
பின்பும்
எனை
நகர விடாமல்
கட்டி போடுகிறது
நாம் ரசித்த
நொடிகள்
பார்வையின் சுடர்
வார்த்தைகளைக் கூட
தேவையற்றதாக்குகிறது
அருகிலில்லாத தருணமே
காதலின் ஆழத்தை அதிகரிக்கிறது
காதல் என்பது சுவாசம் போல
அது இல்லையெனில்
உயிரே முழுமையில்லை
மூச்சின் மென்மையான இசை
காதலை காலமற்ற
பயணமாக மாற்றுகிறது
💖 பக்கம் 7 / 478
📋 Copied