உன் மௌனம்
ஒரு அழகான சிறை
அதில் ஆயுள் கைதியாக
வாழ்வதையே
என் இதயம் விரும்புகிறது
உனக்கு எங்கிட்ட பேச
புடிக்கலன்னு தெரியும்
ஆனா என்னால தான்
உன்னோட குரல
கேக்காம இருக்க முடியல
சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்
இதயம் அறியாமலே
சிலரை வழிபட ஆரம்பிக்கிறது
நினைவல்ல என்
நிழலும் உயிர்
கொள்ளும் அவள்
விழி கொல்ல
தானாய் மலரும்
பூவாய் நீயும்
மலர்ந்தாய்
என் இதயத்தில்
என்றும்
உதிரா (சு)வாசமாய்
அழகாய்
கோடி விண்மீன்கள்
நடுவே தனித்துத் தெரியும் நிலவு போல
கோடிக் கூட்டத்திலும்
என் கண்கள்
தேடுவது உன்னை மட்டுமே
உன்னை காதலிப்பது
என் இதயத்தின்
முடிவில்லா கவிதை
உன் பார்வையில்
தொலைந்தது நான்
மட்டுமல்ல என்
கோபங்களும் தான்
மாலை நேர வானம் சாய்ந்தபோது
காதல் நிறம் மனதில்
பரவி ஆனந்தம் தருகிறது
💖 பக்கம் 61 / 478
📋 Copied