புன்னகையிலிருந்து தொடங்கிய பயணம்
இதயத்தின் அடுக்கு அடுக்காய்
ஆழமாகி விடுகிறது
எத்தனை மைல் தூரம்
நீ இருந்தாலும்
எந்தன் மனதை
சிறைப் பிடித்தவன் நீயே
மௌன பார்வை மட்டும் போதும்
ஆசை நொடிகளை
கணக்கிலேயே தொலைக்கிறது
காதல் என்பது
காலத்தை முறித்து
நம் இருவரையும்
ஒன்றாக பின்னும் தேன் நூல்
மௌனத்தில் கூட
காதலின் ஓசைகள் கேட்கும்
அதற்கு இரண்டு இதயங்கள்
மட்டும் போதும்
மணிக்கணக்காய்
பேச வேண்டும்
என்ற எண்ணமில்லை
நீ பேசினால்
மணித்தியாலங்கள்
கரைவது கூட
தெரிவதில்லை
உன்னைக்
காணாத பொழுதெல்லாம்
பார்வை இழக்கிறேன்
நான்
சிறுகச் சிறுக
சருகாய் உதிர்ந்தாலும்
உயிரின் கடைசி
துளிவரை
உன் நினைவே
நிறைந்திருக்கும்
என்னில் என்னன்பே
தழுவலில் உருகும் உடல்
இரவின் இரகசியத்தை
வெளிப்படுத்துகிறது
இதயத்தில் மெதுவாக
இடம் பிடிப்பவரே
வாழ்வை முழுவதும்
மாற்றிவிடுகிறார்
💖 பக்கம் 60 / 478
📋 Copied