விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...
எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது
மறைக்க முடியாத விருப்பம்
இரவின் இருளில்
கனவுகளுக்குள் தீப்பொறிகளாக
நுழைந்து இதயத்தை எரிக்கிறது
இருவரும் பேசாமல் இருந்தாலும்
மனசுக்குள் ஒத்துப் போவது தான்
காதலின் அழகு
வார்த்தைகள் தேவையில்லாமல்
ஒரு பார்வையால்
மனம் முழுதும்
நேசம் நிரம்பி வழிகிறது
இதயம் பேசும் மொழி
காதலின் அமைதியான இசைதான்
காலம் தவறிய காதல் கூட
இதயத்தைக் காயப்படுத்தும்
அளவுக்கு உண்மைதான்
சிரிப்பின் பின்
ஒரு சின்ன காதல்
ஒளிந்து கொண்டிருக்கிறது
காற்றில் கலந்த
அவளின் வாசனை
இதயத்தில் ஒரு மெளனம்
அழுத்தமான பார்வையால்
மட்டுமே காதல் தொடங்கும்
பின் புன்னகையால்
உயிரோடு உருகும்
💖 பக்கம் 450 / 478
📋 Copied