என்னுள்
நீயே முழுதும்
வியாபித்திருப்பதால்
வேறெதற்கும் இடமில்லை
மனதில்
கண்களில் எழுதும்
கவிதைகளுக்கு
மொழி தேவையில்லை
மௌனத்தின் மத்தியில்
கலக்கும் பார்வைகள்
இரு உயிர்களின்
கவிதையை எழுதுகின்றன
மௌனமும்
பேசும்
என்றுணர்ந்தேன்
காதல் மொழி
உன்னருகில்
காதல் என்பது
இரு இதயங்களின் இசை
ஒவ்வொரு துடிப்பிலும்
அந்த இசை மேலும்
அழகாக மாறுகிறது
கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
கொஞ்சும் விரல்களில்
நிறைய காதல்
வந்தவுடன் மறைந்துவிடும்
வானவில்லாய் அல்ல
நமதன்பு வளர்பிறைக்குள்
ஒளிந்திருக்கும் பௌர்ணமிநிலவு
கைகளின் ஒற்றைத் தொட்டில்
உயிர்கள் கூடிய இசை ஒலிக்கிறது
சின்ன சிரிப்பின் ஓசை
உள்ளத்தின் ஓசையை
மாற்றி விட்டது
கண்ணாடியில்
எனை ரசிப்பதைவிட
உன் விழிகளுக்குள்
ரசிக்கவே விரும்புது
மனம்
💖 பக்கம் 417 / 478
📋 Copied