அருகில் அமர்ந்த தருணமே
உலகம் நிற்கும் உணர்வை தருகிறது
இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இரு இதயங்களின்
இசையை உருவாக்குகின்றன
என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே
விழிகளால் தொடும் ஆசை
தோலில் எழுதும் கவிதை
விடியற்பொழுதில்
வெளிச்சம் பரவுவதைப்போல்
உன் வருகைப்பொழுதெல்லாம்
காதல் பரவி அழகாகிறது
என் உலகம்
காற்றின் ஓசையிலும்
அவள் நினைவு ஒலிக்கிறது
குளிர்கிறது மனம்
உன் அன்பின்
போர்வைக்குள்
இருவேர் இடையே
மௌனமான புரிதலே
காதலின் நிஜ அழகு
மௌனத்தின் நடுவில்
ஒளிந்திருந்த எளிய சிரிப்பு
காதலை அதிகமாக
ஆழப்படுத்தியது
நேசிப்பவர்களை தினமும்
பார்க்க முடியாவிட்டாலும்
தினமும் அவர்களோடு
மனம் விட்டு பேசி
சிரிப்பதும் சந்தோஷம் தான்
💖 பக்கம் 390 / 478
📋 Copied