கண்ணை அலங்கரிக்கும்
மையாய்
என்னை அலங்கரித்து
கொள்கிறேன்
உன் அன்பால்
அத்தனையும் சாதாரணமே
உன் அன்பின் முன்
என் கண்களை பார்த்தால்
உனக்கே தெரியும்
உன் அன்பே என் சாந்தி
ஆயிரம் வார்த்தைகளில்
சொல்ல முடியாத காதலை
உன் ஒற்றை விழி அசைவு
எனக்குக் கடத்திச் செல்கிறது
இதயத்தின் துடிப்பு
ஒரே சமயத்தில்
இரு உடம்பிலும் ஒலிக்கும்போது
அது ரோமான்ஸ்
தொல்லையென
நினைத்தேன் உன்னை
தொலைந்துபோனேன்
நானே உன்னில்
இந்த உலகத்தில்
உன்னை போல்
ஒருவரும் இல்லை
என்பதை விட
என் உள்ளத்தில்
உன்னை தவிர
ஒருவரும் இல்லை
என்பதே சரி
பார்வை தொட்டதிலே
மனசு பூத்தது
ஒரு வார்த்தை இல்லாமலே
காதல் முழுமை ஆனது
தொடாத தொடுதலே
ஆசையின் தீப்பொறிகளை கிளரச் செய்து
கனவுகளை சூடான நெருப்பாக மாற்றுகிறது
நித்தமும் எனக்காகவே
காத்திருக்கும் ஒற்றை
பேரழகி அவள்
💖 பக்கம் 29 / 478
📋 Copied