எண்ணிக்கையை
கணக்கிட்டால்
பல நூறுகளை
கடந்துவிடும்
ஒரு பொழுதில்
நான் உனை
நினைத்து
கொண்டிருப்பது
காதலுடன்
மனதை கேட்காமல்
மனசாட்சியே உந்தும்
எண்ணம் தான் ரோமான்ஸ்
மலையை சூழும்
பனி மூட்டமாய்
மனதை சூழ்கிறாய்
இதமாய் குளிராய்
ஒரு கணத்துக்கு கூட
பிரிய மனது இல்லாதபோது
அதுதான் ஆழமான காதல்
இரவின் அமைதிக்குள்
காதலின் இரகசியங்கள்
மென்மையாக குலுங்கும்
மூச்சின் சூட்டில்
கலந்து வரும் நெருக்கம்
காலத்தை நிறுத்துகிறது
சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்
நீ சென்ற வழியில்
பூவும் வாசம் கூட
நின்று பார்க்கும்
மாலை நேரத்தின் மங்கலொளியில்
இரு இதயங்கள் வார்த்தையின்றி
ஒருவரை ஒருவர்
உணர்ந்து இணைகின்றன
சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
💖 பக்கம் 263 / 478
📋 Copied