மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை

மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்

அன்பின் மொழிகள் பேசுவோம்
இதயங்களின் ராகம் சேர்ப்போம்
நீ நானும் இந்த காதல் பயணம்
என்றும் சுகம்

உதடுகள் சொல்வதல்ல
மௌனமே காமத்தின்
மொழி பேசுகிறது

மௌனமான தருணங்கள் கூட
இருவரின் இதயங்களை
இணைக்க வல்லவை

மழைத்துளியில் விழும்
இரு கண்கள் கூட
ஆயிரம் ராகங்களைப் பாடுகிறது

தட்டிக்கழிக்க நினைத்தாலும்
மனம் எட்டிப்பார்த்து
தொலையிது

ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்

பற்றி கொண்டாய்
கரத்தை
பத்தி கொண்டது
காதல் தீ
பார்வைகளின் உரசலில்

நம்மை
நனைத்த மழைதுளி
உலர்ந்தபோதும்
நாம் இணைந்த
நினைவுதுளி
இன்னும் ஈரமாகவே
மனதில்...!