மௌனத்தின் நடுவில்
ஒளிந்திருந்த எளிய சிரிப்பு
காதலை அதிகமாக
ஆழப்படுத்தியது

நீ இல்லையென்று
தெரிந்தும்
ஏதோவொரு நற்பாசை
எதிர்படமாட்டாயோ
என்று விழிகளுக்கு

உனக்காக
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று...

உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது

சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி

நீ சென்று
கொண்டே இருக்கிறாய்
உன் நினைவு
வந்து கொண்டே இருக்கு

நீரில் மூழ்கியும்
அணையவில்லை
உன் நினைவு தீ

எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்

விழிகளுனை
தேடியதை விட
உள்ளம் உன்னில்
தொலைந்தது
தான் அதிகம்
நம் நினைவில் மூழ்கி

மௌனமான கண்கள்
சொல்லும் காதல்
வார்த்தைகளில் தோன்றாத
தீவிரத்தை கொண்டிருக்கும்