அவளின் புன்னகை
என் முழு நாள்
வேலைநிறைவு புள்ளி
அவளின் புன்னகை
என் முழு நாள்
வேலைநிறைவு புள்ளி
அழகான மௌனத்தில்
கலந்து கிடக்கும்
அந்த பார்வை
ஒரு காதல் கவிதை
கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே
அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென
மௌனத்தில் பேசும் நெஞ்சங்கள்
வார்த்தைகளால் அணைக்க முடியாத
காதலை வைத்திருக்கும்
வார்த்தைக்கு தடைபோட்டு
விழியில் கதை பேசுகிறாய்
காதல் மொழியில்
நீ என்னைத் தொடாத
நேரத்தில் கூட
நெஞ்சம் குலுங்கியது
உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை
காரணம் வைத்து பிடிப்பதில்லை
காதல் காரணமே இல்லாமல்
பிடிப்பது தான் காதல்
ஒரு இரவில்
மின்னும் நிலவு போல
காதலியின் சிரிப்பு
உள்ளத்தைக் கொளுத்தும்