மௌனம் சில நேரம்
காதலை விட
இனிமை தருகிறது
உன் பக்கங்களை
வாசித்து
என் பக்கங்களை
தொலைத்து
விட்டேன்
நான் நீயாகி
பாசம் ஒரு பார்வை போதுமே
ஆயுள் முழுதும் நிலைத்திருக்க
பாறை மனமும்
நீ எனக்காக
பனிக்கட்டியாய்
உருகும்
இதயமும் நீ
தோளில் சாயும் அந்த நொடி
உலகத்தின் சத்தங்களை
மறக்கச் செய்கிறது
மௌனத்திலேயே
ரொமான்ஸ் அதிகம் பேசுகிறது
உன்னை பிடிக்கும்
என்பதைத் தவிர
வேறென்ன காரணம்
இருந்துவிடப்போகிறது
நான் உன் கரம் பிடிக்க
ஆயுள் இல்லா
சண்டைகளில்
அடித்துக் கொள்வதைவிட
அணைத்துக் கொள்வதே அதிகம்
ஆழ்கடலில் வீழ்ந்திருந்தால்
மீண்டிருப்பேன்
வீழ்த்தி விட்டாய்
அன்பு கடலில்
சுகமான தந்தளிப்பில்
மீண்டிட மனமின்றி
நான்
விடிந்த பின்னும்
கலையாத
கனவு நீ
கண்களிலிருந்து
💖 பக்கம் 198 / 478
📋 Copied