அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு
கைகளின் வசீகரம்
சுவாசத்தின் மயக்கம்
இருவருக்குள் ஒரு மாயம்
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!
காதல் என்பது ஒரு கலை
இதயம் தான் அதன் ஓவியர்
உன் முகம்
ஒளியிழந்தால்
என் மனமும் இருளில்
சிரிப்பு பகிர்ந்த தருணங்களில்
சில வாழ்நாளையே
மாற்றி விடக்கூடியவை
ஒரு நிமிஷத்துல
என்னைய
வேணாம்னு தூக்கிப்போட
உனக்கு
எப்படி மனசு வந்துச்சு
நிலையில்லா
நொடிகளென்றாலும்
தித்திக்குது மனதில்
தேனீராய் நீ
இதயம் ஏற்றுக் கொண்டவனை
உலகம் மறுத்தாலும் பரவாயில்லை
மனம் மட்டும் காதலிக்காது
சில நேரம்
உடலும் பேச நினைக்கும்
💖 பக்கம் 189 / 478
📋 Copied