வருடும் மயிலிறகில்
உன் கரத்தின் மென்மை
கிறங்குகிறேன்
காதலில் மெல்ல

மறுத்திட முடியாமலும்
தெரிவிக்க தெரியாமலும்
எனக்குள்ளே மையல்
கொண்டுள்ளது உனக்கான
என் தூரத்து நேசங்கள்

ஒரு மௌனமான அணைப்பு
ஆயிரம் வார்த்தைகளை விட
ஆழமாக பேசும்

நான் கேட்டு ரசித்த
கவிதைகளும்
அவள் சொல்ல விரும்பிய
வார்த்தைகளும்
அவளின் இரு விழிகளுக்குள்
புதையல்களாய்
கொட்டி கிடக்கின்றன

விழித்ததும்
விழியோரம்
நீ என்
விடியலாய்

மலர்களின் ராணி
இவள்தானென்று
மணிமகுடம் சூட்டி
அழகு பார்த்ததோ
மார்கழிப்பனி

தூக்கத்தில் பார்த்த கனவில்கூட
அவளது நிழலை
விட்டு விட மனமில்லை

நிர்மலமான
இந்த உலகில்
நிறைந்தேயிருப்போம் வா
நீயும் நானுமாய்

அருகில் இருந்தாலும்
தொட்டுவிட முடியாத தேடல்
அது தான் காம உணர்வின் சூட்சுமம்

மூச்சின் சலனத்தோடு கலந்து
இச்சையின் அலை எல்லைகளை
மீறி உடல் முழுதும் பரவுகிறது