உன் மனை முற்றத்தில்
நீ மதிமுகம் காட்ட
நான் காத்திருப்பேன்
அன்றே என்
வானில் பெளர்ணமி

உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்

பார்வை மௌனமாகப் பேசும் போது
இதயம் ஒரு புதிய மொழி கற்றுக்கொள்கிறது

செல்லும் இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவை போல்
நீயும் நினைவில்
காதலர் தின வாழ்த்துகள்

காதல் ஒரு இசை
இரு மனங்களும்
அதில் கரைந்து ஒலிக்கின்றன

பாதி நீ பருக
முழுதாய்
நான் சுவைத்துக்
கொண்டிருக்கிறேன்
மீதியை
உன்னிதழ் சுவையோடு

பாசம் சில நேரம் வலி தரும்
ஆனாலும் அது இனிமை

நிகழ்வது உன்
மடியிலென்றால்
ஏற்பேன் மகிழ்வுடனே மரணம்...

மூச்சின் மென்மையான அசைவில்
காதல் நிழலாய் வந்து
மனதை சுற்றி பிணைக்கிறது

கண்கள் பேசும் இடத்தில்
மொழிகளுக்கு
இடமே கிடையாது