சிறு சிரிப்பிலேயே
பாசம் மலர்ந்து
இருள் சூழ்ந்த நாள்களையும்
ஒளியாக மாற்றும்
எதுவும் தோனாத
போதுதான் உணர்கிறேன்
நீ எல்லாமுமாக
எனக்குள் இருப்பதை
நீ விழிகளில்
கவிதை எழுத
என் விழிகளுக்கு
மையிடுகிறேன்
மையலோடு
ஒரு பார்வையில்
உனது காதல்
என் சுவாசம் ஆகி விடுகிறது
உன் மார்பில்
சாயும் தருணம்
என் வாழ்வின்
எல்லா வலிகளையும்
மறக்க வைக்கும் மருந்து
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக
பல பக்கங்களை
புரட்டிய போதும்
ஒரு பக்கத்திலும்
அறிய முடியவில்லை
உன் மௌனத்துக்கான
காரணத்தை
மன புத்தகத்தில்
தூரத்தை வென்ற நெருக்கமே
தீவிர காதலின் அடையாளம்
இரு இதயங்கள் மௌனத்தில்
உரையாடும் போது
உலகமே மழையாக மாறுகிறது
💖 பக்கம் 145 / 478
📋 Copied