விரல்களின் நடையில்
எழுதப்படும் கவிதை
காதலின் சரீர மொழியாகி விடுகிறது
என் தனிமையை
ஆள்கிறாய்
உன் நினைவெனும்
சாம்ராஜ்யத்தால்
கண்ணில் தங்கிய ஒரு பிம்பம்
இரவின் நிலவாக மாறியது
தோளில் ஓயும்
ஒரு சுவாசம்
வாழ்வை மறக்க வைக்கும்
இருவரும் பேசாமல்
பார்வைகள் மட்டும் சேரும்
நேரம்தான் காதலின் உச்சம்
நான் வசிக்கும்
உன் இதயத்தை விட
அனைவரும் ரசிக்கும்
இந்த தாஜ்மஹால்
ஒன்றும் அத்தனை
அதிசயம் இல்லை
எனக்கு பிடித்ததை
எல்லாம் நீ ரசிப்பதால்
உனக்கு பிடிக்காததை
நான் தவிர்க்கிறேன்
காதலர் தின வாழ்த்துக்கள் அழகியே
இப்படியே இருந்துவிடேன்
முப் பொழுதும்
என் காதலனாய்
எனதன்பு கணவா
தேடலில் தொலைவதும்
ஒருவித சுகம்தான்
நீயும் உணர்ந்திருப்பாய்தானே
அலையே
குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற
💖 பக்கம் 138 / 478
📋 Copied