ஊடல்கள் நமக்குள்
புதிதில்லை என்றாலும்
பல மணிநேர
மௌனத்தின் பின்
உன் குரல் கேட்க
கண்களும் நனையிது
ஆனந்தத்தில் தொலைத்தது
கிடைத்தது போல்
நீ உச்சரித்த
பின் தான் தெரிந்தது
என் பெயர்
இத்தனை அழகு என்பதே
உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே
மீளக்கூடாதத் தருணம்
கண்களில் தெரியாத மின்சாரம்
உடல் முழுவதும் ஓடுகிறதே
ஆபத்துக்களை
பற்றி கவலையில்லை
ஆட்கொள்ள நீயிருப்பதால்
நம் வாழ்க்கை பாதையில்
கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்
முடிவை பற்றி
கவலையில்லை
விழி செல்வது
உன் வழியில்
என்றால்
கண்கள் சந்திக்கும் நிசப்தம்
ஆழமான உணர்வுகளை
வெளிப்படுத்துகிறது
கண்ணில் பார்க்க முடியாத
ஒன்றுதான் உண்மையான காதல்
ஆனால் அதை
மனம் மட்டும் உணர முடியும்
மௌனத்தில் கூட
இதயம் பேசும்
மொழி காதல்தான்
💖 பக்கம் 137 / 478
📋 Copied