இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்
உன் நினைவொளியில்
வாழ்வேன்
நானும் அழகிய
உலகில் உன்னோடு
சிரிப்பில் தோன்றும் ஒளி
இதயத்தின் இருளை கரைத்தது
நீ ரசிக்க
மையிட்டு
நானே
கிறங்கி போனேன்
உன் விழிகளில்
இரவு அமைதியில் கூட
அவளின் மூச்சு ஓசை
ஒரு கவிதை
சலிக்காமல்
நீ கலைத்து விளையாட
அலுக்காமல்
நான் அள்ளிமுடிந்த
நொடிகள்
அழகாய் மனதில்
சுகமான வலியாய்
சீ(தீ)ண்ட நீயில்லாத
போது
முகத்தில் புன்னகை
இல்லாமல் இருந்தாலும்
இதயத்தில் இடம் இருந்தால்
காதல் நிறைந்தது
ஒரு முறை
கட்டி அணைத்தால்
பிரிவென்பதே மறந்து போகும்
தூரம் இருந்தாலும்
துடிப்பின் நடுநடுப்பில் அவள்தான்
விரல்களின் உரசல்
ஒரு கவிதை எழுதும் வரை
அழகாக இருக்கும்
நினைவுகள் கரைந்து வரும் போது
இரு உயிர்கள் ஒரே இசையாக
காதலின் வெப்பத்தில் உருகுகின்றன
💖 பக்கம் 105 / 478
📋 Copied