கவலைப்படுவதால்
மனதின் ஆற்றலும்
உயிரின் சக்தியும்
வீணாகிறது
எதிலும் அளவறிந்து
வாழப் பழகினால்
சிக்கலுக்கு இடமிருக்காது

பிறர் வாழ்க்கையை
பாராட்டும் முன்
உன் வாழ்நாளுக்கு
அர்த்தம் கற்பி

நம்ம யாருக்கும்
மேலவும் இல்ல
நம்ம யாருக்கும்
கீழவும் இல்ல
யாருக்கும்
ஈக்வழும் இல்ல
நம்ம தனி தான்

வேண்டாமென்று
தூக்கி எறிந்தவர்கள் முன்
நீ மட்டும் தான்
வேண்டும் என்ற அளவுக்கு
வாழ்ந்து காட்டனும்

முடியும் என்ற
நம்பிக்கை தான்
வெற்றியின் முதல் படி

நாம் நம்மை
எப்படி பார்க்கிறோம்
என்பதே முக்கியம்
மற்றவர்கள்
அபிப்பிராயமெல்லாம்
தேவையில்லாத ஆணி தான்

ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை

பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல

மழலையாய் மனதை
வைத்திரு கவலைகளும்
தீண்டாது

புன்னகைத்துப் பாருங்கள்
வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்