நிழலால் பயந்து ஓடும் வாழ்க்கை
வெளிச்சத்தையே மறந்து விடும்
வாழ்க்கை ஒரு கேள்விக் குறி அல்ல
அதை விட சவாலானது
அதற்குப் பதில் காண்பது
வாழ்க்கை ஒரு கடல் மாதிரி
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்தி நிறுத்தும்
சில நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்துகொண்டே
இருக்க வேண்டியது
நம்முடைய மனசு
கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்க முடியாமல்
உணர்வின்றியே
உதித்துக்கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
என்னை குறைத்து மதித்தவர்கள்
இப்போது என்னை கவனிக்கிறார்கள்
நேரத்தை சரியாக
பயன்படுத்த கற்றுக் கொண்டவர்கள்
தனக்கு நேரம் சரியில்லை
என்று புலம்ப மாட்டார்கள்
நேரங்களில் இல்லை முன்னேற்றம்
சரியான திட்டமிடுதலில் தான்
வெற்றி அமைந்திருக்கிறது
வாழ்க்கை
உன்னை சோதிக்கையில்
நீ உன்னை நிரூபி
சிறிய முன்னேற்றங்களும்
பெரிய வெற்றிகளை
உருவாக்குகின்றன
வெற்றி
ஒரே நாளில் இல்லை
ஒரே மனநிலையில்
வானம் அளவிற்கு
நல்ல எண்ணங்கள்
பரந்து விரிந்து இருக்கட்டும்
அதில் தீப்பொறி
அளவிற்கு கூட
தீய எண்ணங்களை விதைக்காதே
ஏனெனில்
இங்கு எல்லோரும்
நிலையில்லாதவர்கள்
நிரந்தரமில்லாதவர்கள்
என்பதால்
📖 பக்கம் 88 / 606
📋 Copied