வாழ்க்கை ஒரு வட்டம்
நாம் வைக்கும்
ஒவ்வொரு கோணம்
திரும்பி நம்மையே தொட்டுவிடும்

மௌனத்தில்
உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில்
உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு

முதலில் நீ போராட
வேண்டியது உன்னுடன்
தான் ஏனென்றால் உனக்கு
நடக்கும் அனைத்திற்கும்
முதல் காரணம்
நீ மட்டும் தான்

துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம்
துணிச்சல் தரும்

துன்பமும் ஏழ்மையும்
போதிப்பது போல்
வேறொன்றும்
போதிக்க முடியாது

இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்

சோகத்தைப் பகிர்ந்தால் குறையும்
அதை மறைத்தால் அதிகரிக்கும்

ஒரே ஒரு நிமிடம் கூட
விடாமல் செய்த முயற்சி
பல ஆண்டுகளுக்கு
நம்பிக்கை தரும்

ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்

வாழ்க்கை
ஒரு இசை போல்
சுருதி தவறினாலும்
பாட்டை நிறைவு செய்ய முடியும்