வழி இல்லையென
நினைக்கும் இடத்தில்
வாழ்ந்தவர்கள் தான்
வழி உருவாக்கினார்கள்

தொலைந்ததை
தேடிக்கொண்டு இருக்காதே
கிடைத்ததை
சரியாக பயன்படுத்திக்கொள்

வாழ்க்கை என்றால்
வரும் ஆயிரம் துயர்
அதை பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்

சோகம் துன்பம்
இரண்டுமே
நம் வாழ்வின்
நிலையற்ற
கண்ணாடிகளாகும்
அவற்றை கடந்து
வாழ பழகிக் கொண்டால்
அதை விட
சிறந்த பாடம்
ஏதும் இல்லை

பிறந்ததை எண்ணாதே
வாழும் விதத்தை யோசி

நேற்று விழுந்த இடத்தில்
இன்று நின்றால்
அதுவே முன்னேற்றம்

பிரிந்து செல்லும் ஒவ்வொரு
உறவுகளும் ஏதோ ஒரு
வகையில் எதையாகினும்
கற்று கொடுத்து செல்கின்றனர்

சிரிக்கும் போது
முகம் அழகு
அன்பு காட்டும் போது
மனம் அழகு
நம்பிக்கை வரும் போது
வாழ்க்கை அழகு
நீ நீயாகவே
இருக்கும் போது
எல்லாமே அழகு

நீ வெற்றிபெற வேண்டுமானால்
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை

மற்றவர் நம்மை
வெறுப்பது கூட தெரியாமல்
ஏன் என்கூட பேசல
என்னாச்சு என்று
கேட்குற மனம் தான் அதிகம்