என்னை வீழ்த்தவே
முடியாது என்பது
நம்பிக்கை அல்ல
வீழ்ந்தாலும் எழுவேன்
என்பதே நம்பிக்கை

முதுகில் குத்திவிட்டு
கண்களை துடைப்பவனுக்கு
பெயர் தான்
சொந்தக்காரன்

ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென முயற்சி செய்
வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்

பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது

மழை வரும் வரை
வானம் மட்டும் கறுப்பாகும்
வாழ்க்கையும் அவ்வாறே

நீண்ட பிரிவிற்குப் பின்
மீண்டும் பார்க்கும்போது
கோபம் இருக்காது
வருத்தமும் வலியுமே
மேலோங்கி இருக்கும்

சொல்வது யாருக்கும்
எளிதான விஷயம் தான்
சொன்ன வாக்கை
காப்பாற்றுவது தான்
அரிதானது

துவக்கத்தில் நடுக்கம்
இருந்தால் நல்லது
அதுவே முன்னேற்றத்துக்கு
முதற்காலடி

சந்தோஷத்தை உணர
சோகம் தேவை

இனிமையான நினைவுகள்
சோகத்தின் அடையாளமாய்
மாறிவிடும் போது தான்
உண்மை வலி தெரிகிறது