உங்களிடம் காதல்
அதிகமாக இருந்தால்
நிச்சயமாக வலியும்
அதிகமாகவே இருக்கும்
பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது
மௌனமாகும் போது
மனம் பேசிக்கொண்டு இருக்கும்
ஆனால் அதை கேட்டுவிட யாருமில்லை
இரவின் அழகை ரசிக்க
ஒளியின் அருமையை
உணர வேண்டும்
இருந்தால் நிஜமாயிரு
இல்லயேல்
நிழல் என்று கூறி
மறைந்துவிடு
ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?
ஒரு சிறந்த புத்தகம்
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம் புத்தகங்களை
திறந்து வைப்பின்
ஜன்னலை போன்றே
நல்ல காற்றாக
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க
வாசித்தல் - அவசியமாக
நீ சுயமாகவும்
சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா
இல்லை வெறுக்கிறார்களா
என நினைத்து
ஒரு போதும்
கவலைப்பட தேவையில்லை
வாழ்க்கையில் ஒரு தடுமாற்றம்
முழு பயணத்தை தீர்மானிக்க முடியாது
பல சுவைகள்
நிறைந்த வாழ்க்கையில்
இனிமையை மட்டும் தேடி
அலைகிறது மனது
📖 பக்கம் 208 / 606
📋 Copied