ஏமாற்றங்களுக்குக் கூட
சிலரை மிகவும்
பிடித்துவிடுகிறது
சோகங்களை மறைத்து
வெளியே சிரிப்பதால்
ஏமாற்றங்களுக்குக் கூட
சிலரை மிகவும்
பிடித்துவிடுகிறது
சோகங்களை மறைத்து
வெளியே சிரிப்பதால்
விடியும் என விண்ணை நம்பு
முடியும் என உன்னை நம்பு
உறவுகளில் அன்பு நிறைந்தால்
வாழ்க்கையின் கஷ்டங்களும்
இனிமையாகும்
பொறுமை கடலினும் பெரிதாம்
அதனால்தான் பலரும் அதனுள்
இறங்க மறுக்கிறார்களோ
யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான்
பாரமாக இல்லை
என்பதே உண்மை
ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா
அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க
நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது
வருங்காலத்தைப் பற்றி
கவலைப்படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்
உரிமையின் எல்லை
எதுவென தெரிந்த பிறகு
உறவை தொடர்வதில்
அர்த்தமில்லை
நீ இல்லாத போது
சந்தோஷமாக உள்ளது
நாட்கள் ஓடுவது தெரியவில்லை
ஆனால் நீ என்னை விட்டு
ஒரு நொடி கூட பிரிவதில்லை
ஏன் பிரிவதில்லை கஷ்டமே
காற்று எப்படி வீசுகிறதோ
அதே போலவே
வாழ்க்கையும் நம்மை
இழுத்துச் செல்லும்