அன்பு என்பது
கண்களை மூடும்போது தெரியும் ஒளி
எண்ணங்கள் அமைதியாகும் இசை
நான் மறைக்க
நினைத்த உணர்வுகளையும்
நீ மெதுவாக வெளிச்சத்திற்கு
கொண்டு வருகிறாய்
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடித்தால்
வார்த்தைகள் தேவையில்லை
மௌனம் பேசும் நேரத்தில்
இதயம் தன் ரிதமைக் கண்டது
விழிகள் பேசும்
மொழியில்
காதல் எழுதப்படும்
எப்போதும்
நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
அழகை பார்த்து விரும்பவில்லை
அதற்குள் மறைந்த அமைதியே
என்னை ஈர்த்தது
முகவரியில்
இல்லை என்றாலும்
விரல்களின் தொடுதலில்
தெரியும் உரிமை
ஒதுக்கிட முடியாத
பொக்கிஷம்
உன் நினைவுகள்
என் மனதிலும்
எந் நொடியும்
நீயில்லா ஒரு உலகத்தை
நினைத்தாலே அந்த உலகம்
வெறும் காகிதக் கவிதை
போல தோன்றுகிறது
💖 பக்கம் 473 / 478
📋 Copied