இதயம் சிலருக்காக மட்டும்
துடிக்க கற்றுக்கொள்கிறது
இதயம் ஒரு பெயரை
தட்டும் வரை
காதல் நின்றுவிடாது
மௌனத்தின் நடுவே
ஒரு பார்வையே போதும்
அது இதயத்தை உருக்கி
பாசத்தின் அலைகளில்
மூழ்கச் செய்கிறது
வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது
துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
உடல் பேசும் மொழியில்
ஆசை தீவிரமாக
கவிதை எழுதுகிறது
உன் பேரழகில்
அடங்கும் சூரியன்
என் இதயத்தில்
மீண்டும் உதிக்கிறது
இருவரும் பேசாத நேரங்களில் கூட
காதல் வளர்ந்து கொண்டே இருந்தது
பயப்படும் என் விழிகள்
நம் விரல்கள் கோர்த்ததும்
பயமறியாமற் போனதே
திருமணம் என்பது காதல்
அர்ப்பணிப்பு நம்பிக்கை
மரியாதை தோழமை
ஆகியவற்றில் செழித்து
வளரும் ஒரு வாழ்நாள்
பயணமாகும்
💖 பக்கம் 430 / 478
📋 Copied