கலைத்திட விரும்பாத
கனவொன்று கண்களில்
நிறைந்திருக்கு நீயாக

ஓரிரு சிறிய அணைப்பில்
உடம்பும் மனதும்
உருகி விடும் அதிசயமே காதல்

உறங்கியவளை எழுப்பி
கனவிலும் இக்காதலை
தந்து செல்லும் உன்
நினைவை என்ன செய்ய

திகட்டாத
தித்திப்பு
உன் இதழ்பட்ட
மிச்சம்

சுவாசம் பகிர்ந்த தருணம்
காலத்தை நிறுத்தி விடுகிறது

சிறு தொடுதலின் நடுக்கம்
ஆன்மாவின் ஆழத்தில்
கவிதை எழுதுகிறது

இரவின் இருளில்
மூச்சுகள் சேரும் போது
உலகம் மங்குகிறது

இருவரும் பேசாத நேரங்களில் கூட
காதல் வளர்ந்து கொண்டே இருந்தது

ஒரு மெல்லிய முத்தம்
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்லி விடும்

அனுவளவு
விலகினாலும்
நொடிப்பொழுதில்
பிரிந்திடுமே
உயிர்