தட்டிவிட்ட போதும்
ஒட்டிவரும் மணலாய்
மனதை துரத்தும்
உன் நினைவில்
தடுமாறி போகிறேன்
நானும்
தூரத்தில் இருந்தாலும்
அருகிலேயே வாழ்கிறாய்
நினைவுகளாக
விழிகள்
படம் பிடித்த
பிம்பம் மனதிலும்
இடம் பிடித்து விட்டது
அழகிய ஓவியமாய்
நீயாக
நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்
இருளில் பூத்த
கனவுகளை
ஒளியில் தேடுகிறேன்
எதிரில்
நீ நனவாக
கனவின்
இரவின் அமைதியில்
கலந்து வரும் பார்வை
காதலின் கவிதையை எழுதுகிறது
மழை பெய்யும் இரவில்
காதல் இசையாக விழுந்தது
காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்
உன் உதடுகள்
என் உதடுகளை தொடும்
அந்த கணம்
இந்த உலகத்திலிருந்து
நான் மறைந்து விடுகிறேன்
காற்றை தொட முடியாது
ஆனால் அதன் நுணுக்கத்தால்
காதலை உணர முடியும்
💖 பக்கம் 129 / 478
📋 Copied