காதல் மெல்லிய
தீயாக இருக்கலாம்
ஆனால் காமம் அதில்
பிரம்மாண்டமான
வெப்பத்தை சேர்க்கும்

காதல் என்பது இரண்டு
இதயங்களின் இசை
அதை உலகம் கேட்காமலே
ஆனந்தமடையும்

நாற்றோடு
கதை பேசும்
காற்றாய் மனதை
உரசுகிறாய்
நீ காதல்
மொழி பேசி

மனதை விட
உடல் முன் செல்வதுதான்
காமத்தின் சிறு புரட்சி

இதயத்தின் ஓசையில்
பெயரைச் சொன்னபோது தான்
காதல் உயிர்பெற்றது

தாயின் மடியில் தாலாட்டும்
பாசம் போலதான்
அவளிடம் என் நிம்மதி

அணைத்து கொள் என்னை
உன் தோளோடும் வலி
தீர அழ வேண்டும்
உன் மனதோடு

கோர்க்கின்றேன்
மலரோடு மனதிலும்
ஒரு மாலை
கனவோடு
நீ வந்தால் சூட

விழி
மொழி புரிந்தும்
மௌனத்தை
பரிசளித்து
நீயே
என் விடையாகிப்போனாய்

உன் உதடுகள்
தீயாக இருந்தாலும் பரவாயில்லை
என் ஆசை காற்றாக
உன்னை தீண்டட்டும்