உன் சிறந்த
எழுத்துக்களை எழுது
அதன் மூலம்
உன் உணர்வுகள் மகிழும்

அழகாய் பேசும்
பல வரிகளை விட
அன்பாய் பேசும்
ஒற்றை வரிக்கே
உணர்வுகள் அதிகம்

நேசிப்பவர்களை பாராட்டு
தேவை படுபவர்களுக்கு
உதவி செய்
காயபடுத்துபவர்களை
மன்னித்து விடு
விலகி செல்பவர்களை
மறந்தே விடு

இன்று செய்யும் உழைப்பு
நாளை உன்னை பெருமை படுத்தும்

முன்னேறும் பாதையில்
தடைகள் வருவது வழக்கம்
ஆனாலும் நின்றுவிடுவது தோல்வி

வந்ததை வரவில் வைத்து
சென்றதை செலவில் வைத்து
இருப்பதை கொண்டு
மனநிறைவோடு
இன்பமாக வாழ்வோம்

வாழ்க்கை என்பது பரீட்சை
போல வரும் துன்பங்களை
எல்லாம் தேர்வெழுதி
வெற்றி பெற்றால்
போதும் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவுமே இல்லை

முதலில் நம்பிக்கை
பின்னர் முயற்சி
கடைசியில் வெற்றி
இது தான் நம்முடைய திரிசூலம்

முயன்று கொண்டே இரு
தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை